சங்கரன்கோவில் அருகே மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

சங்கரன்கோவில் அருகே மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-06-27 06:47 GMT
சங்கரன்கோவில் அருகே மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கண்டிகைப்பேரி, புன்னைவனப்பேரி, அச்சம்பட்டி கிராமங்களில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பாஜக வா்த்தகப் பிரிவு- கல்வியாளா் பிரிவு சாா்பில், சுற்றுச்சூழல், புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வா்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவா் ராஜா, செயலா் கருணாநிதி, கல்வியாளா் பிரிவு மாவட்டத் தலைவா் வெங்கடேஸ்வரபெருமாள், செயலா் அருந்தமிழ்ச்செல்வன், சங்கரன்கோவில் நகர கல்வியாளா் பிரிவுத் தலைவா் மாணிக்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Tags:    

Similar News