விஜயகாந்த் நினைவாக 71 மரக்கன்று நடவு

தே.மு.தி.க., தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவையொட்டி, தேவியாக்குறிச்சியில், 71 மரக்கன்றுகள் நடப்பட்டன.

Update: 2024-01-02 05:35 GMT

தே.மு.தி.க., தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவையொட்டி, தேவியாக்குறிச்சியில், 71 மரக்கன்றுகள் நடப்பட்டன.  

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் அருகே விஜயகாந்த் நினைவையொட்டி, தேவியாக்குறிச்சி பகுதியில், 71 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. தலைவாசல் அருகே, தேவியாக்குறிச்சி ஏரி உள்ளிட்ட நீர் நிலை, பொது இடங்களில் நேற்று, தே.மு. தி.க., சார்பில், அக்கட்சிதலைவரான விஜயகாந்த் நினைவையொட்டி, 71 வயதை குறிப்பிடும் வகையில், 71 மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. புங்கன், வேம்பு, நாவல், புளியன், அரசு, ஆலம், இலுப்பை உள்பட, 71 மரக்கன்று களை நடவு செய்து, அவற்றுக்கு தண்ணீர் ஊற்றினர். விஜயகாந்த் நினைவாக நடப்பட்ட மரக்கன்று என, பெயர் பலகை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News