முத்தம்பட்டி ஊராட்சி தோட்டத்தில் 100 சிகப்பு புளி மரக்கன்றுகள் நடவு

Update: 2023-12-04 03:27 GMT

மரக்கன்றுகள் நடவு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வன சரகர் சிவகுமார் முயற்சியில் திண்டுக்கல் நத்தம் பகுதியில் இருந்து விதைகள் சேகரித்து மருத்துவ குணம் கொண்ட 2000 சிகப்பு புளி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவை சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக நடவு செய்யப்படுகிறது. வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை தன்னார்வலர்கள் வேண்டுகோளின் பேரில் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில்குமார் தலைமையில் ஊராட்சிக்கு சொந்தமான மரத்தோட்டத்தில் 100 சிகப்பு புளி மரக்கன்றுகள் நடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக முத்தம்பட்டியில் ஒரே இடத்தில் 100 சிகப்பு கூலி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. அருகி வரும் இந்த மரக்கன்றுகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வளர்க்க உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Tags:    

Similar News