ஓ.என்.ஜி.சி க்கு எதிராக பாமக ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-24 07:45 GMT

பாமக ஆர்ப்பாட்டம் 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளான சின்னவளையம், குண்டவெளி, முத்துசேர்வமடம் உள்ளிட்ட 10 இடங்களில் ONGC கிணறு அமைக்க இடம் தேர்வு செய்யபட்டு ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயங்கொண்டம் காந்திபூங்கா முன்பு பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. பாமக வழக்கறிஞர் பாலு தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ONGC கிணறு அமைக்கும் பணியினை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிடபட்டது. இதில் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News