சென்னையில் யூடியூபரை மிரட்டி கேமராவை பறித்த விவகாரத்தில் 3 பேர் கைது!!

சென்னையில் மின்னணு பொருட்கள் மொத்த விற்பனை நடைபெறும் ரிச்சி தெருவில், யூடியூபர் ஒருவரை மிரட்டி கேமராவை பறித்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-09 06:10 GMT

A2D Youtuber

சென்னையில் ரிச்சி ஸ்ட்ரீட் என்பது மிகவும் பிரபலம். எலக்ட்ரானிக் சாதனங்கள், மொபைல் போன்கள் உள்பட பல்வேறு வகையான மின்சார பொருட்கள் இங்கு கிடைக்கும். இந்த சாலையில் ஏராளமான கடைகள் இருந்து வருகின்றன. இதில் தினந்தோறும் பல்வேறு யூடியூபர்கள் இங்கு வந்து வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு இருக்கும் நிலையில் ஒரு பிரபல யுடியூப் சேனல் ஒன்றில் வீடியோ பதிவு செய்வதற்காக இரண்டு வாலிபர்கள் வீடியோ எடுத்த வண்ணம் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு சில இளைஞர்கள் மது அருந்திக்கொண்டு இந்த யூடியூபர்களை வர சொல்லி கூறியுள்ளனர். ஆனால் இதனை கவனிக்காமல் அந்த யூடியூபர்கள் சென்றுள்ளதால் அவர்களை பின்தொடர்ந்து வந்த ஒரு நபர் அவர்கள் கேமராவை பறிமுதல் செய்து கொண்டு அங்கு வந்து எங்களிடம் பேசுமாறு கூறியுள்ளார். இவ்வாறு இருக்க நாங்கள் தான் பெரிய ரவுடி என்றும் அவர் அந்த வீடியோவில் கூறும் காட்சி பதிவாகி இருந்தது.அவர்களிடம் மது பாட்டில்கள் மற்றும் ஆயுதங்கள் இருந்ததால் கேமராவை எப்படி வாங்கி செல்வது என தெரியாமல் அவர்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். இவ்வாறு இருக்கும் நிலையில் 100 மீட்டர் தொலைவில் தான் ஒரு காவல் உதவி மையம் இருந்துள்ளது. அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததால் எதுவும் பேசாமல் இருந்ததால் அந்த பகுதி சேர்ந்த மற்றொருவர் அவர்களை சமாளித்து கேமராவை வாங்கி கொடுத்துள்ளார். இவ்வாறு இருக்கும் நிலையில் இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வந்தது. இது தொடர்பாக போலீசாருக்கும் பல்வேறு நபர்கள் இந்த வீடியோவை அனுப்பி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெரம்பூரை சேர்ந்த ஸ்ரீதர், பார்த்திபன் மற்றும் கிஷோர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News