ஆலங்குளத்தில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

ஆலங்குளத்தில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர்

Update: 2024-05-16 06:11 GMT
ஆலங்குளத்தில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழக் கடையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் சரவணன் (25)இவர் கடந்த 2ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து தலைமறைவானார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பல இடங்களில் தேடி வந்த நிலையில் இன்று காலை சரவணனை அந்தப் பகுதியில் வளைத்து பிடித்தனர். இதை குறித்து போலீசார் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News