தோல் தொழிற்சாலை ஊழியர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

சிப்காட் தொழிற்சாலையில் பணிபுரிந்த வரும் ஊழியர்களுக்கு இணையவழி குற்றம் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2024-06-23 08:18 GMT

தோல் தொழிற்சாலை ஊழியர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் இணைய வழி குற்றம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிப்காட் பி.பி.கே. தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர், ஓ.டி.பி. மூலம் நடைபெறும் திருட்டு, கடன் செயலிகள், வேலை வாய்ப்புகள் எனக்கூறி நடைபெறும் மோசடிகள் எவ்வாறு நடைபெறுகிறது, அதில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து விளக்கி கூறினார்.
Tags:    

Similar News