முன்விரோத தகராறில் கத்தியால் குத்தியவர் கைது
முன்விரோத தகராறில் கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-23 11:32 GMT
கைது
வடதென் பொன்பரப்பியில் முன்விரோத தகராறில் ஒருவரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர். சின்னசேலம் அடுத்த வடதென்பொன்பரப்பியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 48; சின்னசேலம் அடுத்த அம்மையகரம் பழைய காலனியை சேர்ந்தவர் கருப்பையா, 38; இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், வீட்டில் இருந்த கோவிந்தராஜை, கருப்பையா, கத்தியால் சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த கோவிந்தராஜ், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோவிந்தராஜ் மகன் பவித்ரன் கொடுத்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து, கருப்பையாவை கைது செய்தனர்.