பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் !

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-03-16 06:13 GMT

பாலியல் சீண்டல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே எஸ்.காரைக்குடி பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் தலைமை ஆசிரியராக பிரிட்டோ என்பவர் பணியாற்றி வருகிறார். அப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த தலைமையாசிரியர் பிரிட்டோ ஒரு மாணவியின் சீறுடையை கிழித்து பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதனை பாதிக்கப்பட்ட மாணவி தனது வீட்டிற்கு சென்று அழுது கொண்டே பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் அறிந்து வந்த மானாமதுரை காவல் நிலைய காவல் சார்பு ஆய்வாளர் தெய்வீக பாண்டியன் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியரிடமும், பெற்றோர்களிடமும் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது காவல்துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்திம் அழைத்து சென்றனர். அரசு பள்ளியில் மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் மானாமதுரைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News