அரசு மருத்துவமனை அருகே ஆண் சடலம் போலீசார் விசாரணை
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே நேற்று 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
Update: 2024-06-21 05:02 GMT
அரசு மருத்துவமனை
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே நேற்று 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.