ஆசிரியர் வீட்டில் திருட்டு டிஎஸ்பி தலைமையில் போலீசார் விசாரணை

வீட்டின் பின்பக்கம் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் தங்க நகை மற்றும் வெள்ளி ,ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடி சென்றதால் பரபரப்பு.

Update: 2024-03-15 04:43 GMT

திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே இளையனார்குப்பம் கிராமத்தில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பின்பக்கம் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் வீட்டிலிருந்த 50 பவுன் தங்க நகை மற்றும் 8 கிலோ வெள்ளி ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடி சென்றதால் பரபரப்பு. திருக்கோவிலூர் காவல் துணை கண்கானிப்பாளர் மனோஜ்குமார் தலையில் கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News