பழனியில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சிறப்பு ஏற்பாடு

பழனியில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

Update: 2024-01-25 12:23 GMT
பழனியில் குவிந்துள்ள கூட்டம்

பழனியில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அங்கு கூடி உள்ளனர். பழனி நகர் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக நிரம்பி வழிகிறது. சண்முக நதி,இடும்பன் குளம் ஆகிய இடங்களில் புனித நீராடி வருகின்றனர்.

இந்நிலையில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மலைக்கோயிலுக்கு மேலே பக்தர்கள் அமர்வதற்கும் ,கூடி நின்று பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல வாகனங்கள் நிறுத்துவது நெருக்கடி ஏற்படாமல் இடும்பன் மலை அருகில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News