போதை ஆசாமியை தட்டி தூக்கிய காவல்துறை

Update: 2023-10-31 14:19 GMT

கைதான போதை ஆசாமி


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கோவை மாவட்டம் சூலூர் திருச்சி சாலையில் கடந்த வாரம் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துக்கு முன்பாக போதை ஆசாமி ஒருவர் குறுக்கும், மறுக்குமாக விபத்தை ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகனத்தை ஒட்டி சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார்.

இதனை பேருந்து பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவியது. மேலும் மது போதையில் சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிய போதை ஆசாமியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் போதையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனம் ஓட்டிய போதை ஆசாமி தொடர்பாக விசாரணையை முன்னெடுத்த சூலூர் போலீசார் திருச்சி சாலையில் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில் போக்குவரத்துக்கு இடையூறாக அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டிய நபர் ஒண்டிபுதூர் பகுதியில் வசிக்கும் ராஜகோபாலன் என்பவர் மகன் வினோத் மணிகண்டன் என்பதும் இருகூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.இதனை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News