குடிபோதையில் வாகனம் ஓட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு !

கொல்லங்கோடு அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் குடிபோதையில் பைக் ஓட்டிச் சென்ற வாலிபர் மீது வழக்கு பதிவு.

Update: 2024-06-03 11:28 GMT

வழக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையிலான போலீசார் கண்ணனாகம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மது குடித்துவிட்டு வாகன ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News