அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு !

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 51 அம்பேத்கர் சிலைக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-03-15 06:55 GMT

அம்பேத்கர் சிலை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 51 அம்பேத்கர் சிலைக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலையை தாக்கப்போவதாக மிரட்டலை தொடர்ந்து அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் 28 சிலைகள், திருக்கோவிலுார் -19, உளுந்துார்பேட்டை -4 என மொத்தம் 51 அம்பேத்கர் சிலைகள் உள்ளன. அனைத்து சிலைகளுக்கும் நேற்று காலை முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 15 சப் இன்ஸ்பெக்டர்கள், 51 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News