போலீசாருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட வேண்டும் - தமாகா எம்.யுவராஜா

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் போலீசாருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட வேண்டும் என தமாகா இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா கூறினார்.

Update: 2024-05-28 13:04 GMT

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் போலீசாருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட வேண்டும் என தமாகா இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா கூறினார்.


நாங்குநேரியில் அரசு பஸ் கண்டக்டர்- ஆயு தப்படை போலீஸ் இடையே நடந்த வார்த்தை சண்டை, தமிழ்நாட்டின் 2 பெரிய துறைகளுக்கான பிரச்சினையாக மாற இருந்த நிலையில் தவிர்க்கப்பட்டது. சட்டமன்ற பொதுத்தேர்த லின் போது தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு பஸ்களில் காவல் துறையினர் தங்கள் மாவட்டங்களுக்குள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படும் என்று அளித்த வாக் குறுதியை நிறைவேற்ற வேண்டும். தமிழக காவல்துறையில் சுமார் 1 லட்சம் போலீசார் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பெண் போலீசார்.

பிற போலீசார் சொந்தமாக 2 சக்கர வாகனங்கள் வைத்து பணிக்கு செல்வார்கள். + பணியின் நிமித்தம் செல்லும்போது 'வாரண்ட்' பெற்று பஸ்களில் செல்கிறார்கள். எனவே தவிர்க்க முடியாத தேவை இருந்தால் மட்டும் போலீசார் அரசு பஸ்களில் பயணம் செய்ய வேண்டியது இருக்கும். எனவே போலீசாரின் சமுதாய பணியை கருத்தில் கொண்டு அரசு பஸ்களில் மட்டுமின்றி தனியார் பஸ்களிலும் போலீசார் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர், யுவராஜ் கூறினார்.

Tags:    

Similar News