காவல்துறை வாகனம் மோதி - திமுக இளைஞரணி நிர்வாகி உயிரிழப்பு

சுரண்டையில் காவல்துறை வாகனம் மோதி - திமுக இளைஞரணி நிர்வாகி உயிரிழப்பு.

Update: 2024-04-14 04:34 GMT

உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் கீழப்பாவூர் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளராக பதவி வகித்து வருவதாகக் கூறப்படுகிறது. இவர் நேற்று சுரண்டை பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து சென்ற போது சுரண்டை காவல் ஆய்வாளர் வாகனம் மோதியதில் சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே இவரை மீட்டு தனியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் உடனே அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News