பேரையூர் காவலர் குடியிருப்பில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

Update: 2023-11-14 05:17 GMT
காவலர் மூர்த்தி 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் போலீஸ் ஸ்டேசனில் காவலராக பணிபுரிந்தவர் மூர்த்தி (43). இவர் முதுகுளத்தூரில் மனைவி முத்துலெட்சுமி, மகன் கிருபாகரனுடன் வசித்து வந்தார். பேரையூர் போலீஸ் ஸ்டேசனில் பணியில் இருந்தவர் இரவு 8 மணி அளவில் போலீசார் தங்கும் குவாட்டர்ஸ் ஓய்வு அறைக்கு சென்றுள்ளார்.அங்கு மின்விசிறி கம்பியில் நைலான் கயிறால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பினர். மூர்த்தியின் செல்போன் சுச் ஆப் செய்யப்பட்டுள்ளது, தற்கொலைக்கான கடிதம் ஏதும் எழுதி வைக்கபடவில்லை. இதுகுறித்து முதுகுளத்தூர் டிஎஸ்பி சின்னக்கண்ணு விசாரணை செய்தார். மேலும் முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்குப் பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.

Tags:    

Similar News