விபத்தில் பெண் போலீஸ் பலி

திருப்புவனம் அருகே விபத்தில் பெண் போலீஸ் பலி - போலீசார் விசாரணை.

Update: 2024-02-06 07:20 GMT

விபத்தில் பெண் போலீஸ் பலி போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பத்மா (56). இவர் சென்னை ஏ.டி.ஜி.பி., அலுவலகத்தில் டைப்பிஸ்ட்டாக பணிபுரிகிறார். உடல்நலக்குறைவால் மருத்துவ விடுப்பில் சொந்த ஊரான மதுரைக்கு வந்த அவர் நேற்று மகன் முத்துராமனுடன் மடப்புரம் கோயிலுக்கு வந்துள்ளார். திருப்புவனம் பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் உள்ள வேகத்தடையில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கும் போது தடுமாறி கீழே விழுந்தவர் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்
Tags:    

Similar News