திருவையாறில் அரசியல் பயிற்சி வகுப்பு 

திருவையாறில் அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

Update: 2024-06-25 13:41 GMT

திருவையாறில் அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.


தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஒன்றியம், செந்தலை வரகூரில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.  சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா தலைமையில் நடைபெற்ற அமர்வில், 'கட்சி திட்டம்' என்ற தலைப்பில், சிபிஎம் புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்   மணவாளன், ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.பழனி ஐயா தலைமையில் நடைபெற்ற அமர்வில், 'கட்சி அமைப்பு விதி' என்ற தலைப்பில்,  மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன்,  ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.ராம் தலைமையில் நடைபெற்ற அமர்வில், 'கட்சி மீட்டுருவாக்கம்' என்ற தலைப்பில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி ஆகியோர் பேசினர்.  இதில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.மதியழகன், ஆர்.பிரதீப் ராஜ்குமார், எம்.கதிரவன், பி.ஏ.பழனிச்சாமி,  என் அறிவழகன், என்.நூர்ஜஹான் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News