திருவேங்கடம் அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் பொங்கல் விழா

திருவேங்கடம் அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் பொங்கல் விழா நடைபெற்றது

Update: 2024-01-16 12:45 GMT
கிறிஸ்தவ தேவாலயத்தில் பொங்கல் விழா நடைபெற்றது

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குருவிகுளம் தேவாலயத்தில் இன்று 16ம் தேதி அருட்தந்தை முன்னிலையில் மாட்டுப் பொங்கல் விழாவில் சிறப்பு ஜெபக்கூட்டம் நடைபெற்றது.

இதில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுன்டேசன் நிறுவனர் தென்காசி ஆனந்தன் கலந்து கொண்டு எல்லா வல்ல இறைவனின் ஆசியும் அன்பும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துக்கள் வழங்கி அனைத்து மக்களோடும் மாட்டுப் பொங்கலை கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News