குமரி ஆயுத படை மைதானத்தில் பொங்கல் விழா

குமரி ஆயுத படை மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட எஸ்.பி பங்கேற்றார்.

Update: 2024-01-14 15:22 GMT
குமரி மாவட்ட எஸ். பி பொங்கலிட்டார்

கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படையைச் காவலர்களுடன் இணைந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் குத்துவிளக்கேற்றி, பொங்கல் பானைக்கு தீபம் ஏற்றி பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். பின் ஆயுதப்படை காவலர்களுடன் இணைந்து விளையாட்டிலும் கலந்து கொண்டார்.

Tags:    

Similar News