கரூர் எஸ்.பி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

கரூர் எஸ்பி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-13 08:46 GMT

பொங்கல் விழா கொண்டாட்டம்

 ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் விழாவை கொண்டாடுவதற்கு இப்போது இருந்தே அனைவரும் தயாராகி வருகின்றனர். குறிப்பாக அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பொங்கல் விடுமுறை அளிக்கப்படுவதால், அவர்கள் தங்கள் பணி புரியக்கூடிய நிறுவனங்களில் முன்கூட்டியே பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

இதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாயிலில் மாக்கோலமிட்டு, பொங்கல் பானை வைத்து, பொங்கலை பொங்கி, உற்சாகமாகக் கொண்டாடினர்.

மேலும், பணியாற்றக்கூடிய அனைத்து அதிகாரிகளும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் அனைத்து துறை அதிகாரிகள், காவலர்கள் அனைவருக்கும் தனது மனம் திறந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Tags:    

Similar News