சேலத்தில் வக்கீல் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்

சேலத்தில் வக்கீல் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-14 13:44 GMT

பொங்கல் விழாவில் கலந்து கொண்டவர்கள் 

சேலம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தலைமை தாங்கினார். வக்கீல் சங்க தலைவர் விவேகானந்தன், செயலாளர் நரேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பொங்கல் வைத்து வழிபட்டனர். பாரம்பரிய கலைகளான சிலம்பம், கும்மியாட்டம் மற்றும் காங்கேயம் காளைகளின் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உறுப்பினர் அய்யப்பமணி, பொருளாளர் அசோக்குமார், துணைத்தலைவர் சுகவனேஸ்வரன், துணைச்செயலாளர் ஜெயபிரகாஷ், நூலகர் கந்தவேல், அரசு வக்கீல்கள் தம்பிதுரை, மதன் மோகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News