சரவம்பாக்கத்தில் பொங்கல் விழா

செங்கல்பட்டு மாவட்டம், சரவம்பாக்கத்தில் நடந்த பொங்கல் விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-18 04:55 GMT
சரவம்பாக்கம் கிராமத்தில் பொங்கல் விழா
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், சரவம்பாக்கம் கிராமத்தில், இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சரவம்பாக்கம் கிராம மக்களால் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. மேலும் மகளிருக்கு விளையாட்டுப்போட்டி மற்றும் கோலப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தே.சிவக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் C. பிரியா சக்கரபாணி,துணைத் தலைவர் S.லட்சுமி சுரேஷ் வார்டு உறுப்பினர்கள் ரவிக்குமார், P. மோகன்,கஸ்தூரி இளங்கோவன், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News