மாற்று திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

செய்யாறில் அன்னை தெரசா பார்வையற்றோர் மற்றும் மாற்று திறனாளிகள் சங்கம் சார்பில், மாற்று திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன.

Update: 2024-01-08 09:52 GMT

 செய்யாறில் அன்னை தெரசா பார்வையற்றோர் மற்றும் மாற்று திறனாளிகள் சங்கம் சார்பில், மாற்று திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன. 

செய்யாறில் அன்னை தெரசா பார்வையற்றோர் மற்றும் மாற்று திறனாளிகள் சங்கம் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு அன்னை தெரசா மாற்று திறனாளி சங்க தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார், துணை தலைவர் அருள் முன்னிலையில் ருபாய் 700 மதிப்பில் 100 நபர்களுக்கு வேட்டி ,சேலை ,சர்ட், இனிப்புகள் அடங்கிய தொகுப்புகளை மாற்று திறனாளிகளுக்கு வழங்கினர்.
Tags:    

Similar News