திமு க சுற்றுசூழல் அணி சார்பில் பொங்கல் நல உதவி

நாகர்கோவிலில் திமுக சுற்றுசூழல் அணி சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-01-17 02:20 GMT
தி மு க சார்பில் பொங்கல் நல உதவி
குமரி கிழக்கு மாவட்ட திமுக  சுற்றுசூழல் அணி சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நாகர்கோவில் குறுந்தெரு பூங்கா முன்பு நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ரெ.மகேஷ் கலந்து கொண்டு கழக முன்னோடிகளுக்கு பொற்கிழியும் , பொதுமக்களுக்கு சேலை , வேஷ்டி, பொங்கல் அரசியும் வழங்கினார்.      நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் டாக்டர் ஆனந்த்,  மாநகர செயலாளர் ஆனந்த் , மாமன்ற உறுப்பினர் அனந்த லெட்சுமி , பகுதி செயலாளர் துரை,  குமரி மாவட்ட திருக்கோயில்கள் தலைவர் பிரபா இராமகிருஷ்ணன் ,  மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் சுரேஷ் பிள்ளை,  மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சகாய அரசு , மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த், மாவட்ட விவசாய தொழிலாளர்கள்  அணி அமைப்பாளர் முருகபெருமாள்    உட்பட பலர்  கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News