பைக் விபத்தில் பலியானவர் உடலை எடுக்க தாமதமானதால் போராட்டம்

இருசக்கர வாகனமும், காரும் மோதி கொண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.

Update: 2024-02-24 15:15 GMT

சாலை விபத்தில் பலி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காழியப்பநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன்.

கூலி தொழிலாளியான இவர் தனது டூவீலரில் ஆக்கூர் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது திருக்கடையூர் அருகே அபிஷேக கட்டளை என்ற இடத்தில் எதிரே வந்த கார் டூவீலரில் மோதியதில் மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.த கவல் அறிந்த பொறையார் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இறந்த மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி வருவதில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த உறவினர் அபிஷேக கட்டளை மெயின் ரோட்டில் இறந்த நபரின் உடலுடன்  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழி- காரைக்கால் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் தரங்கம்பாடி தாசில்தார் சரவணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால்  போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து அமரர் ஊர்தி வரவழைக்கப்பட்டு மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய கார் ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News