தபால் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்

சேலம் கிழக்கு தபால் கோட்டத்தில் வரும் 19ம் தேதி தபால் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்

Update: 2023-12-12 04:18 GMT

சேலம் கிழக்கு தபால் கோட்டத்தில் வரும் 19ம் தேதி தபால் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் கிழக்கு தபால் கோட்டத்தில் தபால் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. பொதுமக்களுக்கு தபால் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருந்தால், அன்றைய தினம் நேரில் வந்திருந்து தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும், தங்களது குறைகளை கடிதம் மூலம் தெரிவிக்க விரும்பினால், "முது நிலை கண்காணிப்பாளர் சேலம் கிழக்கு கோட்டம், சேலம்-636001,"என்ற முகவரிக்கு வரும் 14ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தபால்துறையின் மணியார்டர், பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு செய்யப்பட்ட தபால் போன்ற சேவை தொடர்பான புகார் இருப்பின், அது தொடர்பான பதிவு எண், பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் அலுவலகம் போன்ற முழு விவரங்கள் இருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற சேவை தொடர்பான புகார் இருப்பின், அது தொடர்பான முழு கணக்கு எண், அஞ்சல் ஆயுள் காப்பீடு. கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி எண்கள், காப்பீட்டாளரின் பெயர் மற்றும் முகவரி, தபால் அலுவலகத்தின் பெயர் பெயர் போன்ற குறிப்புகள் இருக்க வேண்டும். மேற்கண்ட முழு விவரங்கள் அடங்கிய புகாரை அனுப்பும் அஞ்சல் உறையின் மீது தக் அதாலத் என்று குறிப்பிட வேண்டும். இத்தகவலை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News