தபால் சேவை குறைதீர் முகாம்

விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வரும் 24ம் தேதி தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

Update: 2024-06-13 03:22 GMT

விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வரும் 24ம் தேதி தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அப்துல்லத்தீப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் 24ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் அளிக்கப்படும் சேவைகளில் ஏதேனும் குறைபாடு இருப்பின், அதை தபால் மூலம் விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், கே.பி.டி., வளாகம், கடலுார் ரோடு, விருத்தாச்சலம் 606001 என்ற முகவரிக்கு அனுப்பலாம். 20ம் தேதிக்குள் தபால் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
Tags:    

Similar News