திருப்பூர் வேலம்பாளையம் துணை மின்நிலைய பகுதியில் 3-ந் தேதி மின்தடை!

திருப்பூர் வேலம்பாளையம் துணை மின்நிலைய பகுதியில் 3-ந் தேதி மின் விநியோகம் தடை செய்யப்படும் என அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-01 11:20 GMT
பைல் படம்
திருப்பூர் வேலம்பாளையம் துணை மின்நிலைய பகுதியில் 3-ந் தேதி மின்தடை! அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது வேலம்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் வருகிற 3-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆத்துப்பாளையம், 15.வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு,மகாவிஷ்ணு நகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏ. வி. பி லே அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம்புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதி, சொர்ணபுரி லே அவுட், ஜீவா நகர், அண்ணபூர்னா லே அவுட், திருமுருகன் பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி, டிடிபி மில், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும், எனவே இப்பகுதிகளில் உள்ளவர்கள் சாலையோரங்களில் மரங்களை வெட்டி அகற்ற மின்சார வாரிய ஊழியர்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News