புலியூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

நெய்வேலி அருகே புலியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-22 02:47 GMT

மின் தடை

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலியூர் துணை மின் நிலையத்தில் இன்று 22 ஆம் தேதி புதன்கிழமை பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை புலியூர், புலியூர்காட்டு சாகை, திரட்டிக்குப்பம், கிருஷ்ணங்குப்பம், கட்டியங்குப்பம், கருப்பன் சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Tags:    

Similar News