நாளை மின்தடை

கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Update: 2024-01-09 05:29 GMT

 கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

சேலம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சேலம் கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் காலை 9 மணி மாலை 5 மணி வரை தாதுபாய்குட்டை, கடைவீதி, பழைய பஸ் நிலையம், கோட்டை, கலெக்டர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, செவ்வாய்பேட்டை ஒரு பகுதி, முதல் அக்ரஹாரம் ஒரு பகுதி, மேட்டுத்தெரு, செரிரோடு, பிரட்ஸ் ரோடு, மரக்கடை வீதி, கருங்கல்பட்டி, களரம்பட்டி, பில்லுக்கடை, குகை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, நாராயணநகர், பொன்னம்மாபேட்டை ஒரு பகுதி, பட்டை கோவில், டவுன் ரெயில் நிலையம், 4 ரோடு ஒரு பகுதி, லைன்மேடு, வள்ளுவர் நகர், அன்னதானப்பட்டி, புது திருச்சி கிளைரோடு, திருச்சி ரோடு, சங்ககிரி ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News