அரக்கோணத்தில் நாளை மின்தடை

அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளதாக மின் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-12 10:21 GMT

மின்வெட்டு

அரக்கோணம் மின் கோட்டம் இச்சிபுத்தூர், பள்ளூர், தக்கோலம் மற்றும் புன்னை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

இதனால் இச்சிபுத்தூர், ஈசலாபுரம், எம்.ஆர்.எப்., தணிகைபோளூர், நாகாலம்மன் நகர், வாணியம் பேட்டை, வடமாம்பாக்கம், உளியம்பாக்கம், வளர்புரம், தண்டலம், பள்ளூர், கம்மவார் பாளையம், கோவிந்தவாடி, அகரம், திருமால்பூர், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம், நெமிலி, தக்கோலம் சி.ஐ.எஸ்.எப்., அரிகிலபாடி, சேந்தமங்கலம், புதுகேசாவரம், அனந்தாபுரம், உரியூர், புன்னை, காட்டுபாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூர், எலத்தூர், கீழ்வெங்கட்டாபுரம், வேட்டாங்குளம், மேலேரி, சிறுணமல்லி, சம்பத்ராயன்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என அரக்கோணம் மின் கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News