விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கூலி உயர்வு வழங்க கோரி விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆயக்காட்டூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-07-05 13:24 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு, கடந்த 22.5.2023 அன்று போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தப்படி ஜூன் 1 2024 முதல் மூன்று சதவீதம் கூலி உயர்வு வழங்காத விசைத்தறி நிர்வாகங்களை கண்டித்தும், இதில் தமிழக அரசு தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமானது ஐந்து மெத்தை ஆயக்காட்டூர் என்ற பகுதியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய உதவி தலைவர் எம்.ஜெயவேல் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி ,சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.முத்துக்குமார், சங்க ஒன்றிய தலைவர் அசன், சங்க ஒன்றிய பொருளாளர் முருகேசன் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, இந்த ஆர்ப்பாட்டத்தில் கூலி உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்..
Tags:    

Similar News