சித்தலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ தின சிறப்பு வழிபாடு

தர்மபுரி சித்த லிங்கேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2024-07-04 02:18 GMT
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது இந்த நிலையில் தர்மபுரி நகரப் பகுதியில் எஸ்வி ரோடு இப்பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்று சித்தலிங்கேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பிரதோஷ தினத்தை முன்னிட்டு நேற்று மாலை நந்தி ஆண்டவருக்கு பால் இளநீர், குங்குமம், மஞ்சள், பஞ்சாமிர்தம், பழங்கள் உள்ளிட்ட முக்கிய திரவியங்களை கொண்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பின்பு மூலவருக்கு சிறப்பு ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகள் மற்றும் மகா தேவார நடை பெற்றது பின்னர் கோவில் வளாகத்தில் சுவாமி திருப்தி உள நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News