மருந்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

புலிவலம் கிராமத்திலுள்ள மருதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

Update: 2024-07-04 17:50 GMT

பிரதோஷ வழிபாடு 

சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தில் அமைந்துள்ள யோகசயன சாய் கோவிலில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் மற்றும் நந்திபகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், திருநீறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, மலர் மாலை, அருகம்புல் கொண்டு மருந்தீஸ்வரர், நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த சிறப்பு பூஜையில் புலிவலம் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கினார்கள்.

Tags:    

Similar News