மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதோஷ வழிபாடு

சிவகங்கை மாவட்டம், குயவநடப்பு பகுதியில் உள்ள சிவகோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நடைப்பெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-03-09 05:06 GMT

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதோஷ வழிபாடு

சிவகங்கை மாவட்டம், வந்தவாசி மார்க்கம் குயவநடப்பு கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ம விநாயகர் சுவாமி திருக்கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சோமசுந்தரி அம்மன் சமேத ஶ்ரீ சோமசுந்தரேஸ்வரர் சுவாமிக்கு மாசி மாத மகா சிவராத்திரி பிரதோஷ திருநாளை முன்னிட்டு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.

முன்னதாக மூலவர் சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்யப்பட்டன. பின்னர் உற்சவ தெய்வங்களை பக்தர்கள் தோளில் சுமந்து கோவில் பிரகாரம் வலம் வந்தனர். நிறைவாக சுவாமிக்கு மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்மனை வழிபட்டனர்.

Tags:    

Similar News