சேலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் அன்னாசிபழம் விலை உயர்வு !

சேலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் அன்னாசிபழம் விலை உயர்ந்து கிலோ ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது.

Update: 2024-07-05 04:46 GMT

அன்னாசிபழம் 

தமிழகத்தில் ஓசூர், கொல்லிமலை, கர்நாடக மாநிலம் பெங்களூரு, கேரளா போன்ற இடங்களில் அன்னாசிபழம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் மார்க்கெட்டுக்கு கொல்லிமலை மற்றும் கேராளவில் இருந்து அன்னாசி பழம் விற்பனைக்காக வியாபாரிகள் வாங்கி வருகின்றனர். அவைகள் கடைவீதி, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக அன்னாசிபழம் வரத்து குறைந்துள்ளது.

கேரளாவில் மழை காரணமாக அன்னாசிபழம் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.55 வரை விற்ற அன்னாசிபழம் நேற்று ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து மொத்த வியாபாரிகள் கூறுகையில், சேலம் மார்க்கெட்டுக்கு கொல்லிமலை மற்றும் கேராளவில் இருந்து அன்னாசிபழம் கொண்டு வரப்படுகிறது. கேராளவில் இருந்து வாரத்துக்கு ஒன்று அல்லது 2 முறை 2½ டன் முதல் 3 டன் வரை அன்னாசிபழம் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

ஆனால் அங்கு பெய்த மழையினால் தற்போது அன்னாசிபழம் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை சற்று உயர்ந்துள்ளது. எங்களிடம் இருந்து அன்னாசிபழத்தை சில்லரை வியாபாரிகள் கிலோ ரூ.60-க்கு வாங்கி வெளி பகுதிகளில் ரூ.70 வரை விற்பனை செய்கின்றனர். வரும் நாட்களில் வரத்து அதிகரிக்கும் போது, விலை குறையும் என்றனர்.

Tags:    

Similar News