தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவெண்ணெய்நல்லூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-07 02:51 GMT

ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்டார தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் பொன் னுசாமி, வட்ட பொருளாளர் கார்த்திகேயன், வட்ட துணை செயலா ளர் விவேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார், ஆர்ப்பாட்டத்தில் 243 அரசாணை ரத்து செய்வதோடு, பதவி உயர்வை உடனடியாக பழைய முறையில் வழங்கிடவேண்டும், ஊதிய முரண்பாட்டை சரி செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், அரசு பள்ளிக்கு வழங்குகிற அனைத்து சலுகைகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கவேண்டும், ஆசிரி யர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றுவதுடன், தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளை உடனே நிறைவேற் றிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதில் ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News