தர்மபுரியில் அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு

தருமபுரி உழவர் சந்தை, நீச்சல் குளம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-05-09 09:23 GMT
தருமபுரி மாவட்டம், தருமபுரி நகராட்சி உழவர் சந்தைக்கு  பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அங்கு அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர். அதுல் ஆனந்த், இன்று ஆய்வு செய்தார் . விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார் விவசாயிகளுக்கு குடிநீர் வசதி கழிப்பறை அனைத்தும் உள்ளதா என்று விவசாயிகளிடம் கேட்டார். அது போல் நேதாஜி நீச்சல் குளம் பகுதியில் சென்று நீச்சல் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த்தார். அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தியிடம்  கோடை கால பயிற்சியில் மாணவ மாணவிகள் ஈடுபட்டு உள்ளது குறித்து கேட்டறிந்தார்.  கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கெளரவ்குமார் உடன் இருந்தார்.
Tags:    

Similar News