சிறை கைதிக்கு திடீர் நெஞ்சுவலி

சேலம் மத்திய சிறையிலிருந்த கைதி ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-02-19 13:12 GMT

  சேலம் மத்திய சிறையிலிருந்த கைதி ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காளியப்பன் மகன் மாரப்பன் (24). இவரை நாமகிரிப்பேட்டை போலீசார் கொலை வழக்கில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று மாரப்பனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவருக்கு சிறை மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News