நெல்லையில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

நெல்லையில் நாளை நடைபெறும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் கல்வி மற்றும் இதர சான்றிதழ்களோடு வருமாறு மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-01-18 03:54 GMT

வேலை வாய்ப்பு முகாம் 

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.இம்முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் நேரில் வர வேண்டும். பணி நியமனம் பெற்றாலும் பதிவு தாரர்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News