பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

தென்காசி அருகே பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

Update: 2024-07-03 12:05 GMT
 தென்காசி அருகே பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் ரொக்கப் பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

இப் பள்ளியில் 2023-24ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவா் ஆா். சரவணன், 11ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி எம். பத்மா, 10ஆம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி எம். நிவேதாஸ்ரீ ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. 12ஆம் வகுப்பில் 2ஆவது இடம் பெற்ற மாணவா் எம். சங்கா், 11ஆம் வகுப்பில் 2ஆவது இடம் பெற்ற மாணவி எஸ். துா்காதேவி, 10ஆம் வகுப்பில் 2ஆவது இடம் பெற்ற மாணவி எஸ். வைதேகி ஆகியோருக்கு தலா ரூ.3ஆயிரம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியா் பிரபாவதி, உதவி தலைமையாசிரியா் வைத்தியநாதன், முன்னாள் மாணவரும், நகர திமுக செயலருமான முத்து, முன்னாள் மாணவா்கள் பத்திரகாளி, பிரம்மநாயகம், சாம்பவா்வடகரை பேரூராட்சி தலைவி சீதாலட்சுமி முத்து, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News