போட்டியில் வென்ற விடுதி மாணவர்களுக்கு பரிசளிப்பு

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா பரிசுகளை வழங்கினார்.

Update: 2024-03-17 08:12 GMT

பரிசளிப்பு விழா

புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மாணவர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பேச்சு, கட்டுரை, ஓட்டம், நீளம்தாண்டுதல் போன்ற போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா பரிசளித்துப் பாராட்டினார்.

மேலும், மாணவர் விடுதிகளின் சிறந்த 3 காப்பாளினிகளுக்கு முறையே ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம் என ரொக்கப் பரிசு சான்றிதழ்களையும் ஆட்சி வழங்கினார். அப்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜி. அமீர்பாஷா உடனிருந்தார்.

Tags:    

Similar News