வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து போராட்டம்

வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து கொட்டும் மழையில் போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-30 08:53 GMT

கொட்டும் மழையில் போராட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த விவசாயக்கூலித் தொழிலாளி ஈஸ்வரன் நேற்று முன்தினம் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானார். துப்பாக்கிச் சூடு நடத்திய வனத்துறையினரை கண்டித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஈஸ்வரனின் உறவினர்களுடன் இணைந்து ஒரு சில அமைப்பினர் தர்ணாவில் ஈடுபட்டனர். தற்போது கொட்டும் மழையிலும் ஈஸ்வரனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மழைநீரில் நனைந்து கொண்டே துப்பாக்கிச் சூடு நடத்திய வனத்துறையினரை கண்டித்து கோசங்களை எழுப்பி வருகின்றனர்.
Tags:    

Similar News