தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் நடைபெற்றது.

Update: 2024-07-03 09:19 GMT

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை வகித்தார்.

வருவாய்த்துறை மாவட்ட துணைத் தலைவர் சக்தி, ஓய்வு பெற்ற அலுவலர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் தண்டபாணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் நந்தகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அதில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டை கண்டித்தும், வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News