வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம்

சேலத்தில் வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம் வரும் 10ம் தேதி நடக்கிறது.

Update: 2024-01-06 02:31 GMT

 சேலத்தில் வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம் வரும் 10ம் தேதி நடக்கிறது.

சேலம் மண்டல அளவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது. அதன்படி சேலம் இரும்பாலை சாலையில் தொழிலாளர் வருங்கால் வைப்பு நிதி அலுவலகத்தில் மண்டல ஆணையாளர் சிவகுமார் தலைமையில் நடக்கிறது. அதேபோன்று கிருஷ்ணகிரியில் மாவட்ட அலுவலகத்தில் ஆணையர் ஹிமான்ஷீ தலைமையில் நடக்கிறது. அதன்படி உறுப்பினர்கள், தொழிற்சங்கபிரதிநிதிகளுக்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. தொழில் அதிபர்களுக்கு மதியம் 3 மணி முதல் 4 மணி வரையிலும், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. குறைகளை தெரிவிக்க விரும்புபவர்கள் 9-ந்தேதிக்குள் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரியிடம் தெரிவிக்கவும். இந்த தகவலை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சிவகுமார் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News