நியாயவிலைக் கடைகளுக்கு அதி நவீன 5ஜி கருவி வழங்கல்

நியாயவிலைக் கடைகளுக்கு அதிநவீன 5ஜி கருவி வழங்கும் நிகழ்வு பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Update: 2024-05-30 04:11 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் ஊத்தங்கரை வட்டார பகுதியில் இயங்கி வரும் அரசு நியாயவிலை கடைகளில் பொருட்கள் விற்பனை செய்ய பொருட்களை பதிவு செய்யும் கருவி அதிநவீன 5g தொழில் நுட்பத்துடன் கைரேகை பதிவு செய்து பொருட்கள் வாங்கும் பொழுது அதற்கு உரிய ரசீது பெரும் வகையில் வடிவமைக்கப்பட்ட மெஷின் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமால் நியாயவிலைக் கடை ஊழியர்களிடம் வழங்கினாா். ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள 120 முழுநேர கடைகளுக்கு மட்டும் முதற்கட்டமாக அதி நவீன கருவிகள் வழங்கப்பட்டன. இந்தக் கருவியில் இரண்டு 5ஜி சிம் காா்டுகள் பொருத்தப்படுவதால் தடையில்லா இணைய சேவை கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிகழ்ச்சியில், ஊத்தங்கரை வட்ட வழங்கல் அலுவலர் பிரியதர்ஷினி வட்டாட்சியா் திருமால், நியாய விலை கடை பணியாளர்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags:    

Similar News