உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வழங்கல்

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வழங்கப்பட இருப்பதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-24 12:35 GMT
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் 
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு வைப்பறையில் இருந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் மக்களவைப் பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில், மின்னணு கணினி மென்பொருள் வழி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான சீரற்ற தெரிவு பணிகள் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் பணிகள் நிறைவுற்று, காலை 6.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு வைப்பறையில் இருந்து தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வழங்கப்படவுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தெரிவிக்கப்படுகிறது.
Tags:    

Similar News